கண்ட இடங்களில் குப்பை போடுவோர் வரும் புத்தாண்டு தினத்தன்று கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று தேசிய சுற்றுச்சூழல் முகவை அறிவுறுத்தி உள்ளது.
புத்தாண்டை வரவேற்க லிட்டில் இந்தியா, மரினா பே, ஆர்ச்சர்ட் சாலை போன்ற சிங்கப்பூரின் முக்கிய இடங்களில் அதிகக் கூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் புத்தாண்டிற்கு முதல் நாள் இந்த முக்கிய இடங்களில் தேசிய சுற்றுச்சூழல் முகவையின் குப்பை போடுவதைத் தடுக்கும் அமலாக்கப் பிரிவு அதன் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த உள்ளது.
புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள சிங்கப்பூரின் 10 முக்கிய இடங்களில் கிட்டத்தட்ட 157 அமலாக்க அதிகாரிகளை தேசிய சுற்றுச்சூழல் முகவை சிறப்பு கண்காணிப்புச் சோதனைப் பணியில் அமர்த்தும். இதற்கு முந்திய ஆண்டில் இந்த சிறப்புப் பணிக்கு அமர்த்திய அதிகாரிகளின் எண்ணிக்கையைவிட இது 20% அதிகம்.
குறிப்பாக 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மரினா பே வட்டாரத்தில் நடைபெறும் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைக் கண்காணிக்க ரோந்து மேற்கொள்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக