அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

கற்பழிப்புக்கு இஸ்லாமிய தண்டனை : கே.எம். காதிர் மொஹிதீன்

திருச்சி: திருச்சி லால்பேட்டையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம். காதிர் மொஹிதீன் அங்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
 இன்று இளம்பெண்கள் கற்பழிகப்படுவது அதிகரித்துள்ளது வேதனையளிக்கிறது. கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அதை நாங்கள் முதலில் வரவேற்போம். கற்பழிப்புக்குரிய இஸ்லாமிய தண்டனையை நாங்கள் கூறியபோது அதை காட்டுமிராண்டித்தனம் என்று பலர் தெரிவித்தனர். ஆனால் இன்று கற்பழிப்பவனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துவதை பார்க்கும் போது நாங்கள் சொன்ன கருத்துக்கு வலிமை கிடைத்திருப்பதாகவே கருதுகிறோம் என்றார். டெல்லியில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் கட்டப்படும் என்று அறிவித்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் போன்று அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்கு காரணமான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் அதை முன்னின்று கட்டித்தர முன் வர வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக