அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

அக்டோபர் 5- ம் தேதி சென்னை எழும்பூரில் முஸ்லிம் மாணவர் பேரவை யின் மாநில மாநாடு : பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்


 
திருச்சிக்கு வருகை தந்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பின்னர் நடைபெற்ற முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில அமைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்க ளுக்கு தெரிவித்தார்

சுதந்திரபோராட்ட தியாகிக்கு மமக பொதுச்செயலாளர் வாழ்த்து!

தோப்புதுறைக்கு அருகே இயற்கை எழில் சூழ்ந்த தேத்தாகுடி கிராமத்தில் ஆர்ப்பாட்டமின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார் அந்த தியாகி!
அவர்பெயர் கணேசன், வயது 90! இவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில்(INA) ராணுவ வீரராக பணியாற்றியவர்

மீனவர்களை விடுதலை செய்: வேதாரண்யத்தில் மமக ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் 141 பேரை இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகள் இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளையும் அழைத்து சுமூகப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாகை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வேதாரண்யத்தில் 3.9.2013 அன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல!

கடந்த ஈராண்டுகளாக சிரியாவில் உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது. இது அதிகார மாற்றத்திற்கான யுத்தம் என்பதை விட, ஆட்சியில் இருக்கும் சியா சிந்தனை பிரிவை சேர்ந்த ஆசாத் தரப்புக்கும், தீவிர சன்னி பிரிவு போராளிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம் என்பதுதான் உண்மை. இதை சகோதர எண்ணங்களோடு பேசி தீர்க்கும் பக்குவமும், அரசியல் முதிர்ச்சியும் இருதரப்புக்கும் இல்லை.