டிசம்பர் 26, 2004ம் ஆண்டில் உலகத்தையே உலுக்கிய சுனாமி இந்தியா,
மலேசியா, தாய்லந்து, போன்ற பல நாட்டு மக்களை அதிர்ச்சியிலும்
பீதியிலும் மூழ்கடித்தது. பலரையும்
ஆதரவற்றவர்களாக்கிய இச்சம்பவம், முழு
உலகத்தின் கவனத்தையும் ஈர்த்ததுடன் பலரது
நினைவிலும் பசுமரத்தாணியைப் போல் பதிந்துவிட்டது.
பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து
பரிதாபப்பட்டதுடன் அவர்களது துன்பத்தில்
பங்கெடுக்க உதவிக் கரம் நீட்டியுள்ளவர்களில் ஒருவர்
தமிழகத்தில் உள்ள பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஃபாருக்
மரைக்கார். 45 வயதான இவர், இந்தோனீசியாவில் உள்ள பண்டா
அச்சேயில், பெற்றோரை இழந்து நிர்கதியாய் இருந்த
பிள்ளைகளுக்காக பலரது ஒத்துழைப்பால் 'கிண்டர் ஹட்' எனும்
ஆதரவற்றோர் இல்லத்தை உருவாக்கி உள்ளார்.
சுனாமி பேரழிவில் இந்தோனீ சியாவில் மட்டும்
கிட்டத்தட்ட 220,000 மக்கள் இறந்துவிட்டனர் என்றும்
37,000 பேர் காணாமல் போய்விட்டனர் என்றும்
இந்தோனீசியாவின் சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.
சுனாமி தாக்கிய இடத்திற்கு ஃபாருக் உட்பட
இந்தியாவிலிருந்து 15 மருத்துவர்களும் துபாய்
போன்ற பிற நாட்டிலிருந்து பலரும் விரைந்து சென்று தங்களால்
முடிந்த அளவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு
ஆதரவளித்தனர். 60 பிள்ளைகளையும் சில
உதவியாளர்களையும் கொண்டு துவங்கப்பட்ட இந்த
இல்லத்தில் தற்போது 135 ஆதரவற்ற பிள்ளைகளும் 17
தாய்மார்களும் தங்கி வருவதாக ஃபாருக் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக