அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

வேதாரண்யத்தில் டெங்கு கொசு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி...

வேதாரணியம் தமிழ் பண்பாட்டு கலைஞர்கள் சங்கம் சார்பில் டெங்கு கொசு மற்றும் பிளாஸ்டிக்  ஒழிப்பு  மற்றும் விழிப்புணர்வு பேரணி வேதாரண்யத்தில் இன்று (25.12.2012) நடைபெற்றது. பேரணியை டாக்டர் Y .அக்பர் அலி துவக்கிவைத்தார்,
இந்நிகழ்ச்சியில் சங்க தலைவர் கோ.சகாதேவன், செயலாளர் மணிநடமாதவன், பொருளாளர் முத்துலட்சுமி தென்னரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர். பேரணியில் பொதுமக்கள் அனைவரின் பொறுப்பையும் தட்டி எழுப்பும் விதமாக பெண்களின் கும்மிப்பாட்டு, மாணவர்களின் கோலாட்டம், பாரம்பரிய கரகாட்டம், இவற்றோடு கிராமிய பாடல் வழியாக விழிப்புணர்வை  ஏற்படுத்தியது அனைவரையும் ஈர்த்தது.
படம் & செய்தி: ஷகீல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக