அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

பகட்டான உலகில் ஒரு பதமான மனிதர் - ஹாஷிம் அம்லா.

ஹாஷிம் அம்லா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மொட்டை தலையுடன், சுன்னத்தான தாடியோடு இருப்பார்

பகட்டும் படாடோபமும் நிறைந்தது கிரிக்கட் உலகம். கோடிக் கணக்கில்
பணம் புரளுவதால்,ஒரு வேளை, அப்படி இருக்கலாம். அதன் சாபக்
கேடுகளில் ஒன்று மது விருந்துகள். அத்தகையவற்றில் மூழ்கி விடாமலும்,
சுடு மூஞ்சியாய் ஒதுங்கி விடாமலும் சுயம் காத்து நிற்கும் ஓர் அற்புதமான மனிதர் தென் ஆஃப்ரிக்க கிரிக்கட் வீரர். முகம்மது ஹாஷிம் அம்லா !


உலகத் தர வரிசையில் முதலாம் இடத்தில் நிற்பவர். தென் ஆஃப்ரிக்க அணியின் தூண் - துவக்க ஆட்டக்காரர்.

மொட்டைத் தலை - முகம் நிறையத் தாடி - செக்கச்செவேல் என்ற நிறம் -
உயரத்தாலும் ஒழுக்கத்தாலும் கூட மிக உயர்ந்த மனிதர் இவர். பேட் செய்யும்
நேரம் தவிர மற்ற நேரங்களில் தொழுகையின் ‘வக்து’ வந்தால் அந்தந்த
இடங்களிலேயே தொழுது விடுவார். ஆடவேண்டிய நாட்களிலும் தவறாது
நோன்பு நோற்பார்

இந்திய,குஜராத் மாநில, சூரத் நகரை பூர்வீகமாகக் கொண்டவர் முகம்மது ஹாஷிம் அம்லா ! .நல் வழி நடப்பவர். நபி வழியை பேணுபவர். கிழம்
அல்ல.பூத்துக் குலுங்கும் இளமைக்குச் சொந்தக்காரர்.

தென் ஆஃப்ரிக்காவுக்காக ஆடும் வீரர்களின் சட்டையில் ஒரு மதுபான விளம்பரம் இடம் பெற்றிருக்கும் அதற்காக தென் ஆஃப்ரிக்க கிரிக்கட் அமைப்புக்கும் கோடிக் கணக்கில் வருமானம் வருகிறது. அதிலிருந்து லட்சக் கணக்கில் பணம் வீரர்களுக்கும் வழங்கப் படுகிறது.

அம்லா தென் ஆஃப்ரிக்க அணிக்காக ஆடத் தேர்ந்தெடுக்கப் பட்ட போது இத்தகைய ஒரு சட்டையை அணிந்து கொள்ளும்படி கேட்கப்பட்டார். மதுபான விளம்பரம் இருப்பதால் முடியாது என்று மறுத்தார். அப்படியானால் காசு கிடைக்காது என்றார்கள். பரவாயில்லை என்றார். அணியை விட்டே நீக்கப் பட நேரிடலாம் என்பது வீசப் பட்ட அடுத்த குண்டு...! கொள்கைய விட்டுள்ள புகழ் வேண்டாம். கண்ணை விற்றும் சித்திரம் வேண்டாம் என்றார் உறுதியாக..!

ஆரம்பத்தில் அணி வீரர்கள் கூட கிண்டலும் கேலியும் செய்தார்கள். அம்லா அதை பொறுமையுடனும் புன்னகையுடனும் சகித்துக் கொண்டார். ஆனால் இன்று நிலை வேறு.அவரை ஒரு ஞானிபோல் மதித்துப் போற்றுகிறார்கள். மாஷா அல்லாஹ்....

இந்த மொட்டைத் தலை மனிதர்..இன்று மட்டை ஆட்சியில் மன்னர்..... அவர் தான் இன்று உலகில் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் ஐந்து நாள் கிரிக்கெட் போட்டிகளின் வீரர்கள் தர வரிசையில் நெ# 1 பேட்ஸ்மேன் என்று ஐசிசி (இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது


ஆஸ்திரேலியாவில் நடந்த மேட்ச் ஒன்றில் இவர் கேட்ச் பிடிக்க , மத வெறி பிடித்த வெள்ளை வர்ணனையாளர் ஒருவர் “ தீவிரவாதி கேட்ச் பிடித்துவிட்டார் ” என்றே வெளிப்படையாகச் சொல்லி தன்னுடைய இஸ்லாமிய வெறுப்புணர்ச்சியை வெளியிட்டபோதும் அது குறித்து கருத்து கேட்ட போது சிரித்து அதை புறந்தள்ளி விட்டவர் அம்லா மன்னித்து இஸ்லாம் அருளிய உயரிய குணத்தோடு செயல்பட்டார் அம்லா.
(வேறு யாராக இருந்திருந்தால் மன்னிப்பு கேட்கச் சொல்லி நட்ட ஈடு கேட்டிருப்பார் ....... )

 
அல்லாஹ் அவருக்கு மேலும் கௌரவத்தையும் வெற்றியும் அளிப்பானாக இம்மையிலும், மறுமையிலும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக