அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

மலேசிய பொதுத்தேர்தலில் அன்வாரை எதிர்த்துப் போட்டியிடும் ‘எண்ணம் இல்லை’- மகாதிர் அறிவிப்பு

அன்வாரை எதிர்த்துப் போட்டியிடும் ‘எண்ணம் இல்லை’- மகாதிர் அறிவிப்பு
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர், ஒரு நேரம் தம்மிடம் துணைப் பிரதமராக இருந்து இப்போது மாற்றரசுக்கட்சித் தலைவராகவுள்ள அன்வார் இப்ராகிமை எதிர்த்துப் போட்டியிடும் எண்ணம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

நேற்று மேற்கு மலேசிய மலாய் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நோர்டின் முகம்மட் விடுத்த சவாலுக்கு மறுமொழி வழங்கிய அவர் இவ்வாறு கூறினார்.

“நான் (அரசியலிலிருந்து) ஓய்வு பெற்றுவிட்டேன். திரும்பிச் செல்லும் எண்ணம் கிடையாது. ஆனால், நான் பிரதமராவதற்கு ஒரு காலத்தில் உதவியவர்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன்”, என்று நேற்றிரவு செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக