அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.
வேதையில் சாலை பாதுகாப்பு வார விழா

வேதாரண்யம் லயன்ஸ் சங்கம் மற்றும் சாமி ஓட்டுனர்  பயிற்சி பள்ளி இணைந்து, 24வது சாலை பாதுகாப்பு வார விழாவினை நடத்தினர் .இவ்விழாவில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.
பேரணியை லயன்.G.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்க, காவல் ஆய்வாளர் V.பாலசுப்ரமணியன் துவக்கி வைத்து சிறப்பு செய்தனர். மேலும் பேரணியில் ராமச்சந்திரா கல்வி நிறுவன மாணவர்கள் விழுப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு துண்டுபிரசுரங்களையும் பொதுமக்களிடம் கொடுத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் க.பிரபு (மோட்டார் வாகன ஆய்வாளர்,நாகப்பட்டிணம்), இரா.வெங்கடாசலம் (தாளாளர்,ராமச்சந்திரா கல்வி நிறுவனம்), ப.கண்ணுசாமி (செயலாளர், லயன்ஸ் சங்கம்), சு.செல்வராசு (செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு குழு), சி.சாமி செட்டி(வேதாம்பிகா ஸ்டோர்ஸ்), அம்பாள்.ப.குணசேகரன், லலிதா சண்முகம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
                                                                                                                                                   -மன்சூர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக