அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் முதல் இடம் பெற்ற மாணவிக்கு ம.ம.க பாராட்டு!

மாணவிக்கு ம.ம.க பாராட்டு 

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட வேதாரண்யம் வட்டம்  ஆயக்காரன்புலம் அரசினர் பெண்கள்  மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.கௌசல்யா  அவர்கள் மாநில அளவில் முதல் இடம் பெற்றார்.
அதனை பாராட்டிசெல்வி.கௌசல்யா அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வேதை ஒன்றியம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவிக்கு ம.ம.க வேதை ஒன்றிய செயலாளர் சகோ.முஹம்மது அலி அவர்கள் பாராட்டு கேடயத்தை வழங்கினார். சகோ. மஜீத் அவர்கள் ஊக்க பரிசாக படித்து பயன்பெறும் விதமாக புத்தகம் ஒன்றை வழங்கி சிறப்பித்தார்.மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியை,மற்றும்  பெற்றோர்களுக்கும் ம.ம.க சார்பில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில்ம.ம.க ஒன்றிய துணை செயலாளர் ஜெக.மனிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோ.மன்சூர், தோப்புத்துறை மாணவர் இந்தியா செயலாளர்  சகோ.ஹம்தான், தோப்புத்துறை கிளை பொருளாளர்  சகோ.சகீல் ஆகியோர்  உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக