அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

ஐயப்ப பக்தர்களுக்கு உதவிய தமுமுக-மகிழ்ச்சியில் வேதாரண்யம் மக்கள்!



 
வேதாரண்யம், வாய்மேடு, திருத்துறைபூண்டி ஆகிய ஊர்களிலிருந்து திருச்செந்தூருக்கு சென்றுகொண்டிருந்த ஐயப்பக்தர்கள் பயணம் செய்த பேருந்து இராமநாதபுரம் மாவட்டம் ,தொண்டி- சேந்தநேந்தல் எனும் கிராமத்திற்கு அருகே இரவு சுமார் 2.30 மணி அளவில் கவிழ்ந்தது
, சுபுகு தொழுகை நிறைவேற்றிவிட்டு  வந்த தமுமுகவினர் செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பெண் சிறுவர்கள் உட்பட   54 பேர் பயணம் செய்த அந்த பஸ் தலை குப்பற கிடந்தது. அனைவருக்கும் முதலுதவி செய்து டீ, பிஸ்கட் மற்றும் காலை உணவும் வழங்கி இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிக்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். இதனிடையே பயண குழுவின் குருசாமி அவர்கள் பயணத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு கூறினார், விபத்திலிருந்து மீட்டு உதவிய தமுமுக வினருக்கு குருசாமி நாராயணன் அவர்கள் நன்றி கூறினார்.
 
இதனிடையே விபத்தில் படுகாயமடைந்த நன்குபேர் நாகை அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர், அவர்களை தமுமுக நாகை தெற்கு மாவட்ட தலைவர் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார். விபத்தில் காயமடைந்த வேதாரன்யத்தை சேர்ந்தவர்கள், வேதை ஒன்றிய செயலாளர் சகோ.மன்சூர் அவர்களை தொடர்பு கொண்டு நன்றி  தெரிவித்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக