அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தோப்புத்துறையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்


தமிழக சுகாதாரதுறை உத்தரவின்படி மாவட்ட முழுவதும் 20.01.2013 மற்றும் 24.02.2013 ஆகிய இரு நாட்கள் போலியோ சொட்டு மருந்து
சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்து தோப்புத்துறை (முஸ்லிம் ஸ்கூல்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 20.01.2013  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி  முதல் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் 5 வயதிற்குட்பட்ட  அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.மருந்து கொடுக்காமல் விடுப்பட்ட குழந்தைகளுக்கு 24.02.2013 ஞாயிற்றுக்கிழமை  அன்று மீண்டும் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக