கராச்சி: பாகிஸ்தானில் இஸ்லாமிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் ஷரியா நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானிய நிறுவனங்களை இஸ்லாமிய
திட்டங்களுக்கு மாற்றும் விதமாக முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல்
ஜியா-உல்-ஹக் கடந்த 1980 ஆம் வருடம் ஏற்படுத்தினார். அதன்படி குற்றவியல்
சட்டங்களுக்கு இணையாக இஸ்லாமிய மதத்தில் காணப்படும் ஹுடூட் விதிமுறைகளைப்
பின்பற்றி இந்த நீதிமன்றம் இயங்கி வருகின்றது.
இந்நிலையில், நேற்று கராச்சியில் உள்ள
ஷரீஆ நீதிமன்றத்திற்கு அஷ்ரப் ஜெஹான்(56) என்ற புதிய பெண் நீதிபதி
நியமிக்கப்பட்டார். ஏற்கனவே இவர் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள உயர்
நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணி புரிந்துவந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஷரியத்
நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, "ஆண், பெண் என்ற பிரிவினை இஸ்லாமிய
சட்டத்தில் இல்லை. அதனால் திறமையான பெண்ணான அஷ்ரப் ஜெஹான், இங்கு
செயல்படுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. இதன் மூலம் உலகம்
முழுமைக்கும் தங்களது முற்போக்கான எண்ணத்தை வெளிப்படுத்தி தங்கள்
நாட்டினரைப் பற்றிய பல தவறான கருத்துகள் மாறக்கூடும்" என்று அவர்
குறிப்பிட்டார்.
கடந்த 33 வருடங்களில் இஸ்லாமிய நீதிமன்றத்திற்கு ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக