அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தோப்புத்துறையில் குடியரசுதின நிகழ்ச்சி!

நமது இந்திய திருநாட்டின் 65வது குடியரசு தினத்தை முன்னிட்டு தோப்புத்துறை ஆறுமுச்சந்தியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தோப்புத்துறை (கிளை) சார்பில்  கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
 

நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் சகோ.ருக்னுதீன் தலைமை தங்கினார், த.மு.மு.க மாவட்ட துணை செயலாளர் சகோ.A.மன்சூர்,வேதை ஒன்றிய செயலாளர் சகோ.K.முஹம்மது அலி  ஆகியோர் முன்னிலைவகித்தனர். தேசிய கொடியை ஜமாஅத் மன்றத்தின் தலைவர் சகோ.K.M.K.I. நவாஸ்தீன் ஏற்றினார். பெரியபள்ளி தலைமை இமாம் சிறப்புரைநிகழ்த்தினார்கள். விழாவில் 1வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சகோ. M.நஜுமுதீன், ஜமாஅத்மன்ற முன்னால் தலைவர் S.N.M.ஜெயினுதீன், சகோ.காசிம் (அரிபா குழுமம்) சகோ.கபூர் (பரிபாலன சங்கம்)  த.மு.மு.க மஜீத், த.மு.மு.க தோப்புத்துறை கிளை நிர்வாகிகள் & உறுப்பினர்கள் மற்றும் பலர் இந்நிகழ்சியில் கலந்துகொண்டனர். இறுதியாக கிளை துணை தலைவர் சகோ இர்பனுதீன் நன்றி கூறினார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக