அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சிந்திக்க வைத்த, தீனை நிலைநாட்டுவோம் - துபாய் இஸ்லாமிய மாநாடு


இறைவனின் கிருபையால் தமுமுக-துபாய் மண்டல சோனாப்பூர் கிளையின் சார்பாக 3:1:2014 வெள்ளியன்று தீனை நிலைநாட்டுவோம் என்ற நோக்கத்துடன் இஸ்லாமிய மாநாட்டை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது,கிளை சகோதரர்களின் ஒத்துழைப்போடு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் துபாய் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனையின் அடிப்படையில் மாநாட்டு பணிகள் முடிக்கிவிடப்பட்டன,
இறைவனின் உதவியால் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் நிறைந்து வாழும் சோனாப்பூரில் பெரும்திரளான சகோதரர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள்,

இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் இப்ராஹிம் அவர்கள் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்கள்,துபாய் மண்டல தமுமுக தலைவர் சகோதரர் அதிரை அப்துல் ஹமீத் அவர்கள் தொடக்க உரைநிகழ்த்தினார்,இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அதிரை அப்துல் காதர் அவர்கள் முஸ்லிம்களின் அடையாளம் என்ற தலைப்பில் முதலில் உரைநிகல்த்தினார்கள்,அதை தொடந்து அபுதாபி முஹம்மது அபூதர் அவர்கள் இஸ்லாமும் சமுகப்பணியும் என்ற தலைப்பிலும் பேசினார்கள்,மக்ரிப் தொழுகைக்குப்பின் இஸ்லாமிய அழைப்பாளர் நாசர் அலிகான் அவர்கள் தீனை நிலைநாட்டுவோம் என்ற தலைப்பில் இறுதியாக உரைநிகழ்த்தினார்.

மாநாட்டில் பேசிய அனைத்து அழைப்பாளர்களின் உரைகளும் சிந்திக்க வைக்கக்கூடிய உரையாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது,மக்களை சிந்திக்க வைத்த இம்மாநாட்டில் அமீரக அலுவலக செயலாளர் இஸ்மத் யூனுன்,அபுதாபி மண்டல தலைவர் தாஜுதீன்,ஷார்ஜா மண்டல பொறுப்பாளர் அபுல் ஹசன்,அல்கூஸ் கிளையின் சகோதரர்கள் ஜின்னாஹ்,கொள்ளுமேடு ஜாகிர் உள்ளிட்ட சகோதரர்களும் பலுதியா கேம்பில் உள்ள இலங்கையை சார்ந்த சகோதரர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்,எல்லாப் புகழும் இறைவனுக்கே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக