அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

ஒலிம்பிக்கில் மாட்டுவண்டிப் பந்தயம்!

 
ஒலிம்பிக் விளையாட்டுகளில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மாட்டுவண்டிப் பந்தயத்தைச் சேர்க்க வேண்டும் என்று ஆளும் அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 65 ஆவது பிறந்தநாள் விழா மதுரை மேலூர் மந்தைத் திடலில் நடைபெற்றது. அப்பொதுக்கூட்டத்தில் சம்பத் பேசுகையில்"பண்டைய தமிழக பாரம்பரிய கலைகள் விளையாட்டில் மாட்டுவண்டிப் பந்தயமும் ஒன்றாகும்.

இந்தப் பந்தயம், மதுரை மாவட்டம் மேலூரில் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியை, ஒலிம்பிக்கில் சேர்த்து நடத்தப்பட வேண்டும்" என்றார்.

அவர் மேலும் பேசுகையில் "மத்திய அரசின் நடவடிக்கைகளால் விலைவாசி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. மத்திய அரசை நிர்வகிக்கும் காங்கிரசிடம் இருந்து இந்தியாவை தமிழக முதல்வர் விரைவில் மீட்டுத் தருவார்" என்றார்.

"விரைவில் தமிழகம் மின்சாரத் தன்னிறைவு அடையும்" என்றும் சம்பத் அப்பொதுக்கூட்டத்தில் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக