வேதாரண்யம் அருகே நகைக் கடையில் கடந்த மாதம் வெள்ளி நகைகள் திருடப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யம் தோப்புத்துறை ஆறுமுகச்சந்திப்பில்
உள்ள நவாஸ்தீன் என்பவரின் நகைக் கடையில் கடந்த மாதம் 26-ம் தேதி ரூ.1.50 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகள் திருடப்பட்டன.
இதுகுறித்து வேதாரண்யம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு தேத்தாக்குடி அருகே போலீஸôர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரிடம் 2 கிலோ வெள்ளி, ஒரு மடிக்கணினி ஆகியவை இருந்ததாகவும், அந்த வெள்ளி நகைகள் நவாஸ்தீன் கடையில் திருடப்பட்டதும் தெரியவந்ததாம்.
இதன்பேரில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி பகுதியைச் சேர்ந்த ச. முருகன் (22), ரா. பிரபாகரன், வேதாண்யம் புஷ்பவனம் ரா. ஈழவேந்தன் ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர்.
Thanks-Dinamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக