அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தமிழ் 2ம் தாள் கேள்வியில் குழப்பம் - முழு மதிப்பெண் வழங்க உத்தரவு!

எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வு தமிழ் 2 ஆம் தாளில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில் மாணவர்களுக்கு ஏற்பட்ட குழப்பத்தால் அந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வு நேற்று முதல் நடைபெற்று வருகிறது. தமிழ் முதல் தாள் ஓரளவுக்கு இலகுவாக இருந்ததாகக் கூறிய மாணவர்கள். இன்று தமிழ் 2ஆம் தாளில் கேள்வி எண்  38-க்கான படிவம் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தரப்படவில்லை என்று குழம்பினர்.

இந்த நிலையில் இந்த குழப்பமான கேள்விக்கான பதிலை எழுத முயற்சித்த அனைத்து மாணவர்களுக்கும் அந்த கேள்விக்கான மதிப்பெண் 5 ஐ முழுவதுமாக வழங்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கான உத்தரவை தமிழ் இரண்டாம் தாள் மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டாளர்களுக்கும் வழங்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே வினா எண். 38 என எழுதி வங்கிப்படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய விபரங்களை மட்டும் வரிசை எண்ணிட்டு எழுதிட உரிய அறிவுரைகள் அனைத்து மையங்களில் உள்ள மாணவர்களுக்கு, அறை கண்காணிப்பாளர் மூலம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த தகவல்கள் சில தேர்வு மையங்களில் உள்ள மாணவர்களுக்கு, உரிய நேரத்தில் உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக