அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

இரவு நேரங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்



தோப்புத்துறையில்

கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இந்தியன் ஓவர் சீஸ் பேங்க் கதவை


உடைத்து சில மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு லாக்கர் கதவை உடைக்க முடியாமல் தப்பி ஓடி விட்டனர் அந்த மர்ம நபர்கள் யார் என்று இன்றுவரை தெரியவில்லை அதனை தொடர்ந்து தோப்புத்துறை முக்கிய கடை வீதியான ஆறுமுகச்சந்தி யில் உள்ள பிரபல KMKI நகைக்கடையின் முன்கதவை உடைத்து 1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகள்,மடிக்கணினி ஆகிய பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு பின்பு காவல்துறையின் தீவிர வேட்டையால் 3 திருடர்கள் கைதுசெய்யப்பட்டனர் தற்பொழுது இரவு நேரங்களில் தோப்புத்துறை யில் மர்ம புது முக நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் காவல் துறையிடம் புகார் அளித்து தற்பொழுது இரவு நேரங்களில் போலீஸ் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் வெளிநாடுகளில் இருக்கின்ற சஹோதர்களே..! தங்கள் வீட்டில் இரவு நேரங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுரை கூறுங்கள் இரவில் ஏதேனும் திருடர்களின் நடமாட்டம் இருகின்றது என சந்தேகம் இருந்தால் அவசர உதவிக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் 9688881768 /9952895362.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக