அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் திருவாரூர் மாவட்ட மாணவி மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை



எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் திருவாரூர் மாவட்ட மாணவி மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை



மருத்துவ சேவையில் ஆர்வம்

497 மதிப்பெண் பெற்ற திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவி நுசைபத்நிஷா மாநில அளவில் 3-ம் இடமும், மாவட்ட அள வில் முதலிடமும் பெற்றார். இவர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த கமா லுதீன்-சிராஜ்நிஷா ஆகி யோரின் 3-வது மகள் ஆவார். எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர் வில் மாநில அளவில் 3-வது இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற நுசைபத் நிஷா, திருத்துறைப்பூண்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறிய தாவது:-

10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 3-வது இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக் கிறது. 12-ம் வகுப்பில் மாநில அளவில் முதல் இடத்தை பிடிக்க முயற்சி செய்வேன். மருத்துவம் படித்து பொது மக் களுக்கு சேவை செய்வேன்.

பாடவாரியாக பெற்ற மதிப்பெண்:
நுசைபத்நிஷா-த/பெ. கமாலுதீன் – கட்டிமேடு 497/500
தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100.

மாவட்ட அளவில் 2-வது இடம்:
திருத் துறைப்பூண்டி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.ரய்கானாதஸ்லீம், 496 மதிப்பெண்கள் பெற்று
மாவட்ட அளவில் 2-வது இடம் பிடித்தார்.
பெற்ற மதிப்பெண்:
ரய்கானாதஸ்லீம் -த/பெ. அஸ்ரப் அலி – கட்டிமேடு 496/500


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக