அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தோப்புத்துறையில் இந்துக்களின் உல்லம் கவர்ந்த தமுமுக!

      பஹ்ரைனில் கடந்த வாரம் நடந்த குண்டுவெடிப்பில் தோப்புத்துறை தெற்கு தெருவை சேர்ந்த திரு.திருநாவுக்கரசு என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார், இவருக்கு தோப்புத்துறை, கள்ளிமேடு, வேதாரண்யம் ஆகிய ஊர்களில் உறவினர்கள் உள்ளனர்,
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் திருமணம்செய்திருந்தார், அவரது உடலை மீட்டு தருமாறு அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தனர், பஹ்ரைனில் வசிக்கும் தோப்புத்துறையை சேர்ந்த தமுமுக பிரமுகர் சகோ.சாகுல் (எ) சவன்னா அவர்களும் இதர சமூக ஆர்வளர்களும் அவரது உடலை தமிழகம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர், அவரது உடல் 11.11.12 அன்று விமானம் மூலம் திருச்சி அனுப்பப்பட்டது.

       தமுமுக பிரமுகர் சகோ.சாகுல் அவர்கள் ம.ம.க பொதுசெயலாளர் சகோ.தமிமுன் அன்சாரி அவர்களை தொடர்பு கொண்டு தமுமுகவின் ஆம்புலன்ஸை திருச்சி விமானநிலையத்தில் தயார்நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார், அதன்படி விமானத்தில் வந்திறங்கிய திருநவுக்கரசின் உடலை தமுமுகவினர் ஆம்புலன்ஸில் ஏற்றி அவரது மணவி ஊரான அய்யம்பேட்டைக்கு அனுப்பிவைத்தனர். தமுமுகவினரின் மனிதநேய பணியை அறிந்த தோப்புத்துறை, கள்ளிமேடு, வேதாரண்யம், தேதாகுடி பகுதிகளை சார்ந்த இந்து சகோதரர்கள் நெகிழ்ந்துபோய் தமுமுகவினருக்கு தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெருவித்துகொண்டனர்.
அவரது உறவினர்கள் தமுமுகவை நங்கள் யாரும் மறக்க மாட்டோம் என்று கண்ணீர்மல்க கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக