கனகலதா, வீ.பழனிச்சாமி
தேக்காவில் நேற்றிரவு சாலை விபத்தில் ஒருவர் மாண்டதைத் தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது. கலவரத்தை அடக்க போலிசாருடன், போலிஸ் சிறப்பு நடவடிக்கை தளபத்தியமும் கூர்க்கா படையினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
சில மணி நேரத்தில் கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப் பட்டதாக பின்னிரவு 12.22க்கு வெளியிடப்பட்ட போலிஸ் அறிக்கை தெரிவித்தது. 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஸ் கோர்ஸ் சாலை, ஹேம்ஷியர் சாலைச் சந்திப்பில் நேற்றிரவு கிட்டத்தட்ட 9.23 மணி அளவில் தனியார் பேருந்து மோதியதில் 33 வயது இந்திய நாட்டு ஊழியர் உயிரிழிந்தார்.
தகவல் அறிந்ததும் அங்கு விரைந்த குடிமைத் தற்காப்புப் படையினர் ஊழியர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். பேருந்துக்கு அடியில் மாட்டிக்கொண்டிருந்த அந்த ஊழியரின் உடலை மீட்புக் கருவிகள் கொண்டு மீட்கும்போது, அதிகாரிகள் மீது பொருட் களை வீசி எறிந்து கலகக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த வாகனங்களைச் சேதப்படுத்தியும் அதிகாரிகளைக் காயப்படுத்தியும் கலவரத்தில் ஈடுபட்டுனர்.
கலவரத்தில் மொத்தம் 10 போலிசார், -4 குடிமைத் தற்காப்புப் படையினர், பேருந்து ஓட்டுநர், துணை ஓட்டுநர் உட்பட, 18 பேர் காயம் அடைந்தனர்.
மூன்று போலிஸ் வாகனங்கள், குடிமைத் தற்காப்பு ஆம்புலன்ஸ் வண்டி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகிய ஐந்து வாகனங்கள் எரிக்கப்பட்டன. சம்பவத்தில் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மொத்தம் ஒன்பது வாகனங்கள் சேதம் அடைந்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தனியார் வாகனங்களும் சேதம் அடைந்ததாக அறியப்படுகிறது.
இந்தக் கலவரத்தில் கிட்டத் தட்ட 400 பேர் ஈடுபட்டதாக போலிஸ் வட்டாரம் தெரிவித்தது.
கலவரத்தைத் தொடர்ந்து பஃப்ளோ ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு சாலைகள் போக்குவரத் துக்கு மூடப்பட்டன. அப்பகுதியிலுள்ள கடைகளும் மூடப்பட்டன. அப்பகுதிக்கு பொது மக்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் குடிமக்களும் வீடுகளில் இருக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
“இது ஒரு கடுமையான சம்பவம். இதில் பலருக்குக் காயம் ஏற்பட்டதுடன் பொதுச் சொத்து களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய போலிசார் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வர்,” என்று துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டியோ சீ ஹியன் தெரிவித்தார்.
sourece tamilmurasu.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக