அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி திருமண பதிவேடு : இ.யூ. முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம்


திருச்சி, டிச.29- திருச்சியில் டிசம்பர் 28-ம் தேதி நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சமுதாய தீர்மானங்கள்: 1. சமுதாய ஒற்றுமை காப்போம்

சமுதாய ஒற்றுமை என்பது நம் மார்க்க கடமை; இந்த ஒற்றுமை சீர் குலைய நாம் ஒருபோதும் இடமளிக்க கூடாது.


ரமளான் -ஹஜ்ஜுப் பெரு நாட்கள், தலைநோன்பு, நோன்பு திறக்கும் நேரம் போன்றவை களில் எத்தகைய சர்ச்சைகளை யும் ஏற்படுத்தாமல் காஜிகளின் அறிவிப்புகளுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

போட்டி மஹல்லா, போட்டி ஜமாஅத் என ஏற்படுத்தி சமுதா யத்தில் பிளவுகள் ஏற்பட எவரும் காரணமாக இருக்க வேண்டாம் எனவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு வேண்டுகோள் விடுக் கிறது.

2.மஹல்லா ஜமாஅத் வலிமை சேர்ப்போம்

பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத் அமைப்பே இயற்கையான சமுதாய அமைப்பாகும். இஸ் லாத்தின் சிறப்பம்சமாகிய மஹல்லா ஜமாஅத் வலிமையாக இருந்தால்தான் சமுதாயத் திற்கு பலமும் நலமும் ஏற்படும்.

எனவே பள்ளிவாசலை நிர்வகிப்பது, கபரஸ்தானை பராமரிப்பது என்ற அளவில் மட்டும் ஜமாஅத் கடமையை செய்யாமல், மஹல்லா ஜமாஅத் அனைத்து நலக்காரியங் களையும் முன்னெடுத்துச் செய்ய வேண்டும்.

பைத்துல்மால், ஷரீஅத் பஞ்சாயத், மத்ரஸா, கல்வி, தொழிற்பயிற்சி நிலையங்கள், நூலகங்கள், முஸ்லிம் பெண்க ளுக்கான உதவும் சங்கங்கள், கல்வி உதவி, ஏழை குமர் திருமண உதவி, ஆதரவற் றோர்-முதியோர் பராமரிப்பு, வட்டியில்லா கடனுதவி, மருத் துவ சேவை, திருமண பதிவேடு, பிறப்பு-இறப்பு பதிவேடு பராம ரித்தல் உள்ளிட்டவைகளை ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத் திலும் செயல்படுத்துவது இன் றைய காலத்தில் அவசியமாகும்.

மத்திய-மாநில அரசுகள் வழங்கும் சிறுபான்மையினருக் கான நலத்திட்ட உதவிகள் குறித்து பள்ளிவாசலில் அறி விப்பு செய்வதோடு மஹல்லா ஜமாஅத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.

3. பள்ளிவாசல் பராமரிப்பு உதவி நிதியம்

தமிழகத்தில் உள்ள கிரா மங்களிலும், நகர்ப்புற பகுதிகளி லும் பராமரிக்க இயலாமல் உள்ள பள்ளிவாசல்களை கண்டறிந்து அவற்றை தத்தெடுக்கவும், பள்ளிவாசல் இல்லாத முஸ்லிம் குடியிருப்புகளில் பள்ளிவாசல் களை உருவாக்கும் வகையிலும் பள்ளிவாசல் பராமரிப்பு உதவி நிதியம் துவக்க இம்மாநாடு தீர்மானிக்கிறது.

4.தமிழகம் முழுவதும் ஒரேமாதிரி திருமண பதிவேடு

உச்சநீதிமன்ற அறிவுறுத்த லின் பேரில் தமிழ்நாட்டில் திருமணக் கட்டாய பதிவு சட்டம் 21/2009 கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் ஷரத்துக்கள் மீது முஸ்லிம் சமுதாயத்தில் எழுந்த ஐயப்பாடுகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பெரு முயற்சி மேற்கொண்டதன் பலனாக 26.08.2010 அன்று இச்சட் டத்தில் திருத்தங்கள் செய்யப் பட்டு அரசாணை எண் 758 பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய் வதற் கென்றே படிவம் 1(அ) வெளியிடப்பட்டுள்ளது. இப் படிவம் இஸ்லாமிய திருமணங் களை பதிவு செய்வதற்கென அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது.

எனவே தமிழகத்தின் அனைத்து ஊர்களின் பள்ளி வாசல்களிலும் 1(அ) படிவ அடிப் படையில் திருமண பதிவேடு, ஒவ்வொரு திருமணத்திற்கும் 4 நகல்களுடன் தயாரித்து, ஒன்று மணமகனுக்கும், மற்றொன்று மணமகளுக்கும் இன்னொன்று அந்தந்த பள்ளிவாசல்களில் பத்திரப்படுத்துவதற்காகவும், மற்றதை அந்தந்த ஊர் சார்பதி வாளருக்கு பதிவு செய் வதற்கு அனுப்பிடச்செய்யும் வகையிலும் ஒரே மாதிரியாக தயாரிக்க வேண்டுமென மஹல்லா ஜமாஅத்துக்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

5. ஊர்கள் தோறும் மீலாதுந் நபி விழா

நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தின விழாக்களை நடத்தி அதில் பிற சமய அறிஞர் பெருமக்களை யும் பேச வைத்தன் மூலம் இஸ்லாத்தை பற்றி பிற சமயத்தவர் அறிந்து கொள்ள வும், சமூக நல்லிணக்கம் ஏற் படவும் வாய்ப்பு கிடைத்து வந்தது. இடை காலத்தில் பல ஊர்களில் மீலாது விழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சமூக நல்லிணக்கம் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ள இக்கால கட்டத்தில்,

நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தின விழாக்களையும், பெருநாள் சகோதரத்துவ சந்திப்புகளாக ஈத்மிலன் நிகழ்ச்சிகளையும் ஊர்கள் தோறும் நடத்தி அவற்றில் மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள், சர்வ சமய பிரமுகர்களை அழைக்க வும், அதன் மூலம் சமூக நல்லிணக்கத்துக்கும் இஸ் லாத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ள செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்துமாறு மஹல்லா ஜமாஅத்துகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

6. சிறப்பு திருமண சட்டம் பற்றிய எச்சரிக்கை

பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு விண் ணப்பிக்கும் போது சார்பதிவாளர் அலுவலகம் திருமண சான்று கேட்பதால், காலம் கடந்து திருமணங்களை பதிவு செய் வோர் அறியாமையாலோ-பத்திர எழுத்தர் அல்லது பதிவாளர்க ளின் தவறான வழிகாட்டுத லாலோ சிறப்பு திருமணச்சட்டம் (ளுயீநஉயைட ஆயசசயைபந ஹஉவ 1954)ன் கீழ் முஸ்லிம்கள் தங்கள் திருமணங்களை பதிவு செய்வதாக தகவல்கள் வருகின்றன.

தாய், தந்தையின் சகோதரி மக்களை திருமணம் செய்ய தடை, முதல் மனைவி இருக்க இரண்டாவது திருமணம் செய்ய தடை, மண விலக்கு பெற நீதிமன்றங்களுக்குத்தான் உரிமை. இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டப்படி சொத்து பாகப்பிரிவினை பெற தடை என்பன போன்ற ஷரீஅத் சட்டத்தை பாதிக்கும் அம்சங்களைக் கொண்ட இச்சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் திருமணம் செய்யக்கூடாது என சமுதாயத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய மஹல்லா ஜமாஅத்துகளையும், பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் இமாம்களையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

7. காஜிகளுக்கு சட்ட அங்கீகாரம்

முஸ்லிம் சமூக அமைப்பில் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை போன்ற வாழ்வியல் விவரங்களை நிறைவேற்றுவ தும், அதற்கான சான்றிதழ் வழங்குவதும் காஜிகள், நாயிப் காஜிகள் என்ற பள்ளிவாசல் இமாம்கள்-கதீப்களின் வழக்க மான பணியாக இருந்து வரு கிறது.

ஆனால் இத்தகைய காரியங்களை செய்வதற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடையாது என அறிவிக்க கோரி வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் திருமதி பதர் சயீத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள சமுதாய அமைப்புகள் எதுவும் இதுபற்றி வாய் திறக்காத நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் இந்த வழக்கிற்கு எதிராக வாதம் செய்ய தன்னை எதிர் மனு தாரராக இணைத்து செய்த மனுவை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. காஜிகள், இமாம்களின் அதிகாரத்தை நிலைநாட்டி இஸ்லாமிய கட்டமைப்பை காப்பாற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்டுள்ள இந்த சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்குமாறு சமுதா யத்தை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

8. மஹல்லா நிர்மாண பணிகளில் இளைஞர்களை பயன்படுத்துவீர்

மஹல்லா ஜமாஅத்துக்களில் உள்ள மஸ்ஜிது, மதரஸா, மற்றும் ஜமாஅத் கட்டடங்களை ஆண்டில் இரண்டு முறை-ரபியுல் அவ்வல் மாதத்திலும், ரமளான் திங்களிலும் அந்தந்த மஹல்லா ஜமாஅத்தில் உள்ள இளைஞர்களை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபடுத்து மாறு மஹல்லா ஜமாஅத் நிர்வாகங்களை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது. 9. சங்கை மிக்க இமாம்களுக்கு தகுதியான ஊதியம்

பள்ளிவாசல்கள், மதரஸா, மக்தப்களில் பணி புரிந்து வரும் சங்கை மிகுந்த ஆலிம்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு வழங் கப்படும் சம்பளம் மற்றும் சலுகை உதவிகளை தாரளமாக நிர்ணயம் செய்யும்மாறு மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்டவாறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

இத் தீர்மானங்களை அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி, பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் தாஹா, பொரு ளாளர் கீழக்கரை எஸ்.கே. எஸ். ஹமீதுர் ரஹ்மான், அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ். அப்துர் ரஹ்மான், அபுதாபி மண்ட லச்செயலாளர் ஆவை அன்சாரி, சிங்கப்பூர் கவுஸ் மரைக்காயர்,

தாய்லாந்து காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் வாவு எம்.எம். சம்சுதீன், குவைத் காயிதெ மில்லத் பேரவை செய்தித் தொடர்பாளர் காரைக்கால் எஸ்.எம். ஆரிப் மரைக்காயர், கத்தார் காயிதெ மில்லத் பேரவை தலைவர் கே.வி..ஏ.டி. ஹபீப் முஹம்மது, ஹாங்காங் காயிதெ மில்லத் பேரவை எஸ்.எச். அபுல்ஹசன் ஆகியோர் முன்மொழிந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக