சென்னை : பக்ரீத் பண்டிகையையொட்டி, இந்தாண்டு, 100 ஒட்டகங்கள் வரை,
குர்பானிக்காக சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளன.முஸ்லிம்களின்
ஈகைத் திருநாளான, பக்ரீத் பண்டிகை, வரும், 16ம் தேதி கொண்டாடப்பட
உள்ளது. இதற்காக, ராஜஸ்தானில் இருந்து, சென்னைக்கு, 10 ஒட்டகங்கள்
நேற்று கொண்டு வரப்பட்டன.
தெலுங்கானா போராட்டத்தால் ஆந்திரா வழியாக
ஒட்டகம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால், இந்தாண்டு, ஒட்டக கறி விலை, ஒரு மடங்கு உயரும் என, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தாஹா மற்றும் அப்துல் ஹமீது தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் கூறியதாவது:கடந்தாண்டு, ஒரு ஒட்டகம், 35 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்தாண்டு, 50 முதல், 65 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தெலுங்கானா போரட்டம் மற்றும் டீசல் விலை உயர்வால், ராஜஸ்தானில் இருந்து ஆந்திரா வழியாக சென்னைக்கு ஒட்டகங்களை கொண்டு வருவதில் சிரமம் நிலவியது.தற்போது, நாங்கள், 10 ஒட்டகங்களை குர்பானிக்காக கொண்டுவந்துள்ளோம். இஸ்லாமிய மரபுபடி, ஏழு வயது பூர்த்தியடைந்த, குர்பானிக்காக வளர்க்கப்படும் ஆடு, மாடு மற்றும் ஒட்டகத்தை மட்டுமே குர்பானி கொடுப்போம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
source Dinamalar.com
தெலுங்கானா போராட்டத்தால் ஆந்திரா வழியாக
ஒட்டகம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால், இந்தாண்டு, ஒட்டக கறி விலை, ஒரு மடங்கு உயரும் என, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தாஹா மற்றும் அப்துல் ஹமீது தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் கூறியதாவது:கடந்தாண்டு, ஒரு ஒட்டகம், 35 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்தாண்டு, 50 முதல், 65 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தெலுங்கானா போரட்டம் மற்றும் டீசல் விலை உயர்வால், ராஜஸ்தானில் இருந்து ஆந்திரா வழியாக சென்னைக்கு ஒட்டகங்களை கொண்டு வருவதில் சிரமம் நிலவியது.தற்போது, நாங்கள், 10 ஒட்டகங்களை குர்பானிக்காக கொண்டுவந்துள்ளோம். இஸ்லாமிய மரபுபடி, ஏழு வயது பூர்த்தியடைந்த, குர்பானிக்காக வளர்க்கப்படும் ஆடு, மாடு மற்றும் ஒட்டகத்தை மட்டுமே குர்பானி கொடுப்போம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
source Dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக