நாகப்பட்டினம்: வேதாரண்யம் மீனவர்கள் 16 பேர் மீது நடுக்கடலில் இலங்கை
மீனவர்கள் கடுமையாக தாக்கியுள்ள சம்பவத்தால் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோடியக்கரை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரணயம் வெள்ளபள்ளம் மீனவர்களை இலங்கை மீனவர்கள் குழு வழிமறித்துள்ளது. கட்டையால் மீனவர்களைத் தாக்கியதுடன் மீன்களையும் பறித்துக் கொண்டது. வேதாரண்யம் மீனவர்கள் 16 பேர் மீது இலங்கை மீனவர்கள் கடும் தாக்குதல் இதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் படுகாயமடைந்தோருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இலங்கை கடற்படை தாக்கி வந்த நிலையில் இலங்கை மீனவர்களும் தற்போது தாக்குதல் நடத்துவதால் கடலோர கிராமங்களில் பதற்றமான நிலைமை உருவாகி உள்ளது.
கோடியக்கரை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரணயம் வெள்ளபள்ளம் மீனவர்களை இலங்கை மீனவர்கள் குழு வழிமறித்துள்ளது. கட்டையால் மீனவர்களைத் தாக்கியதுடன் மீன்களையும் பறித்துக் கொண்டது. வேதாரண்யம் மீனவர்கள் 16 பேர் மீது இலங்கை மீனவர்கள் கடும் தாக்குதல் இதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் படுகாயமடைந்தோருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இலங்கை கடற்படை தாக்கி வந்த நிலையில் இலங்கை மீனவர்களும் தற்போது தாக்குதல் நடத்துவதால் கடலோர கிராமங்களில் பதற்றமான நிலைமை உருவாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக