தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு ஏற்படும்
பிரச்சினை குறித்து பெற்றோர்களுக்கு பல சந்தேகங்கள் எழுவதுண்டு. இதற்கு
விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய செகண்டரி கல்வி போர்டு நிபுணர்கள்
அளித்துள்ள விளக்கங்கள் இதோ...
தேர்வு நெருங்கும் நேரத்தில் பெற்றோர்களுக்கு என்ன ஆலோசனை சொல்ல விரும்புகிறீர்கள்?
- மாணவர்களின் திறமை மற்றும் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு யதார்த்தமான எதிர்பார்ப்பை வைத்துக் கொள்வது நல்லது.
- தொலைக்காட்சி பார்த்தல், விளையாடுதல், படம் வரைதல் போன்று மாணவர்களின் பொழுது போக்கு நடவடிக்கைகளை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டாம்.
- குறை சொல்லிக்கொண்டே இருப்பதைத் தவிர்க்கவும்.
- அன்புடன் அவர்களது கடமைகளை நினைவுபடுத்துங்கள்.
- சரியான நேரத்தில் தூங்குவதையும் உடற்பயிற்சி செய்வதையும் ஊக்கப்படுத்தவும்.
- இந்த முக்கியமான நேரத்தில் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு ஏற்ற சாதகமான சூழ்நிலையை வீட்டில் ஏற்படுத்தவும்.
- மாணவர்களின் பலத்தை எடுத்துக்காட்டுங்கள்.
- கடந்த காலத்தில் தோல்விகள் ஏற்பட்டிருந்தால் அதிலிருந்து விடுபட்டு முன்னேறிச் செல்ல ஊக்கம் கொடுக்கவும்.
- மற்ற மாணவர்களுடனும் அவர்களது சாதனைகளுடனும் உங்களது குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்தவும்.
- தேர்வு நேரத்தில் மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நடந்துகொள்வது இயற்கையானதுதான் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
- தேர்வுக்கு முந்தைய நாட்களில் மாணவர்கள், தாங்கள் படித்தது மறந்து போய் விட்டது என்றால் அதற்காகப் பதற்றப்பட வேண்டாம்.
- மீண்டும் அமைதியாக சிந்தித்துப் பார்த்தால், படித்ததெல்லாம் ஞாபகத்துக்கு வந்து விடும் என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.
- உன்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யவும்.
- பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால், ஆசிரியர்களிடம் விளக்கம் பெறச் சொல்லுங்கள்.
- தேர்வு குறித்த பயங்கள் இருந்தால் ஆசிரியர்களிடம் பேசினால் நம்பிக்கை வரும்.
- தேர்வு நேரங்களில் ஒரு நாளில் 15-லிருந்து 30 நிமிடங்கள் வரை அவர்களுடன் செலவிட்டு ஜாலியாகப் பேசி உற்சாகப்படுத்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக