அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

ப்ளஸ் 2 & 10ம் வகுப்பு : தேர்வு முடிவு தியதிகள் அறிவிப்பு



சென்னை : இவ்வாண்டுக்கான பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முறையே மே 9 மற்றும் 31ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ப்ளஸ் 2 பொது தேர்வு மார்ச் மாதம் 1 முதல் 27 வரை நடைபெற்றது. 8,04.534 மாணவ, மாணவிகள் எழுதிய இத்தேர்வில் இவ்வாண்டு விடைத்தாள்கள் மாயம், எரிப்பு , தண்டவாளத்தில் கண்டுபிடிப்பு என வினோதமான சம்பவங்கள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
அது போல் மார்ச் 27 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வை 10.5 இலட்சம்  மாணவ, மாணவிகள் எழுதினர். இச்சூழலில் ப்ளஸ் 2 முடிவுகள் மே 9 அன்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31 அன்றும் வெளியிடப்படும் என்று தேர்வு துறை இயக்குநர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக