மீனவர்களை விடுதலை செய்: வேதாரண்யத்தில் மமக ஆர்ப்பாட்டம்
இலங்கை
சிறையில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் 141 பேரை இலங்கை அரசு
விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகள்
இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளையும் அழைத்து சுமூகப் பேச்சுவார்த்தைக்கு
ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாகை தெற்கு மாவட்ட மனிதநேய
மக்கள் கட்சி சார்பில் வேதாரண்யத்தில் 3.9.2013 அன்று கோரிக்கை
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி,
மாநில அமைப்புச் செயலாளர் ராவுத்தர்ஷா ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
மாவட்டத் தலைவர் ஜபருல்லாஹ், செயலாளர் முபாரக், பொருளாளர் சதக்கத்துல்லாஹ்,
துணைச் செயலாளர் மன்சூர், ஓ.எஸ்.இப்ராஹிம், தமுமுக மாவட்டச் செயலாளர்
பரக்கத் அலி, வேதாரண்ய ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உட்பட 200க்கும்
அதிகமானோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக