மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் தடா அப்துல்ரஹீம் திருச்சியில் இன்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது
அவர், ‘’2002ல் குஜராத் கலவரத்தின் போது நடந்த படுகொலைக்கு நரேந்திர மோடி
தான் காரணம். ஆனால் இந்த சம்பவம் நாய்க்குட்டி காரில் அடிபட்டு இறப்பது
போன்றது என அதற்கு ஒப்பிட்டு அப்போது நரேந்திர மோடி பேசினார்.
எனவே
அவரது வருகைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நாளை திருச்சி வரும்
நரேந்திர மோடிக்கு கறுப்பு கொடி காட்டுவோம் இதில் பல்வேறு அமைப்புகள்
கலந்து கொள்கின்றன’’என்று கூறினார்.
பாதுகாப்பு காரணம் கருதியும், முன்னெச்சரிக்கை காரணமாகவும் திருச்சியில்
உள்ள ஜமால் முகமது கல்லூரிக்கு நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை
விடச்சொல்லி காவல்துறை உத்தர விட்டது. இதையடுத்து அக்கல்லூரிக்கு இரண்டு
தினங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதைக்கண்டித்துள்ள
திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள், இதற்கு எதிராக மாணவர்கள் கையெழுதி
கண்டனம் தொடங்கினர். சட்டக்கல்லூரி மாணவர்கள் 5 பேர், ஈவெரா
கல்லூரியில் மாணவர்களிடையே கையெழுத்து பெற்று வந்தனர். அப்போது அவர்கள்
கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக