அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சிங்கப்பூர் : தோப்புத்துறை முஸ்லிம் சங்க இப்தார் நிகழ்ச்சி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மிகவும் பழமையான சங்கங்களின் ஒன்றான தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் சார்பில் 24-07-2013 அன்று பென்கூலன் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 
 


நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் உள்துறை மற்றும் வெளிவுறவு துறை மூத்த துணை அமைச்சர் மசகோஸ் ஜுல்கிப்லி (Masagos Zulkifli)  மற்றும் சிங்கப்பூர் வாழ் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள்,வணிகர்கள், சமுக சேவகர்கள், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர்.எம்.தமிமுன் அன்சாரி  என பலரும் கலந்து கொண்டனர்.
 
தலைமை உரை ஆற்றிய சங்கத்தின் தலைவர் ஜனாப்.ஹாஜி.டாக்டர் கே.எம்.தீன் அவர்கள்  தோப்புத்துறையை சேர்ந்த மக்கள் சிங்கப்பூரில் அரசுதுறை அதிகாரியாகவும் , புகழ் பெற்ற தனியார் நிறுவனங்களின் ஊழியர்களாகவும் பணிபுரிவதோடு மற்றுமின்றி மிகச்சிறந்த வணிகர்களாகவும் திகழ்கிறார்கள் என்று குறிப்பிட்டார் . நிகழ்ச்சி ஏற்பாட்டை சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர் .

 நன்றி : இமாம்.சாகுல் ஹமீது 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக