அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

“இது சீரழிவைத்தான் ஏற்படுத்தும்..” பேராசிரியர் காதர் முகைதீன்



 “உலக முஸ்லிம்கள் எல்லாரும் பின்பற்றுவதற்குரிய
தகுதிபெற்ற எந்த ஒரு முஸ்லிம் நாடாவது
இன்று இருக்கிறதா?



இந்திய முஸ்லிம்களாகிய நாம்
எகிப்தைப் பின்பற்ற முடியுமா?
ஈராக்கைப் பின்பற்ற முடியுமா? அல்லது
சவூதி அரேபியாவைப் பின்பற்ற முடியுமா?
சுருங்கச் சொன்னால், உலகிலுள்ள எந்த ஒரு
முஸ்லிம் நாட்டையும் நாம் பின்பற்ற இயலாது.
காரணம், இந்தத் தகுதி பெற்ற ஒரு நாடும்
இன்றைக்கு இல்லை.

இந்த நிலையில் புதிதாக ஒருவர் எழுந்து,
“நான் கலீஃபா! என்னை முஸ்லிம் உலகம் பின்பற்ற வேண்டும்!
என் சொற்படி எல்லாரும் முஸ்லிமல்லாத நாடுகள் மீது
ஜிஹாத் செய்ய வேண்டும்” என்று கூறுகிறார்.
இதை எப்படி நாம் ஏற்க முடியும்?

இன்னும் சில நாட்களில்
இன்னொரு முஸ்லிம் நாட்டில் ஒருவர்
“நானும் கலீஃபாதான், என்னைத்தான்
முஸ்லிம் உலகம் ஏற்க வேண்டும்”
என்று பிரகடனம் செய்தால்
அப்போது உலக முஸ்லிம்கள் நிலை என்ன?
இன்றைய உலக முஸ்லிம்களுக்கு சீரழிவை
ஏற்படுத்துவதற்குதான் இப்போது நடக்கின்ற
முயற்சிகள் பயன்படுமே தவிர வேறல்ல."

Idealvision Tnmedia


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக