நம்மாழ்வார்: புத்தாண்டில் விதைக்கப்படும் இயற்கை விதை!

எழுபத்தைந்து வயது இளைஞர். தன்னிடம் பத்து வயது சிறுவன் பேசினாலும், "சொல்லுங்கய்யா...!" எனக்கேட்கும் பரிவு. விவசாயிகளுக்கு இடர் என்றால் ஓடோடி வந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த நம்மாழ்வார் இன்று நம்மோடு இல்லை.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததும், தனது போராட்டத்தை டெல்டாவில் தொடங்கினார். கடந்த ஒரு வருடத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டத்தை நடத்தியவர். தனது இறப்பிற்கு முதல்நாள் வரை போராடியவர்.