சிங்கையில் மிலாது விழா

சிங்கப்பூர்: ஜாமியாஹ் எனப்படும் இஸ்லாமிய அமைப்பின் சார்பாக மிலாது நபி விழா "மௌலிதூர் ரசூல்" என்று கடந்த 30.03.13(சனிக்கிழமை) மாலை பெடோக் விளையாட்டரங்கில் நடைபெற்றது.




விழாவில் மலாய் இந்திய இஸ்லாமிய சமூக மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 16 இந்திய முஸ்லிம் சங்கங்களின் அமைப்பான இந்திய முஸ்லிம் பேரவை (FIM) தலைமையில் பேரணியும் நடைபெற்றது. நமதூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (சிங்கப்பூர்) TMAS உம் அதன் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மலாய் மற்றும் தமிழ் மொழியில் பயானும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப்.பைசல் அவர்கள் கலந்து கொண்டார்.

- இமாம்.ஷாகுல் ஹமீது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக