புதிய மருத்துவ படிப்பு : சென்னையில் தொடக்கம்

சென்னை : புதிய மருத்துவப் படிப்பினை சென்னை மருத்துவ கல்லூரி தொடங்க உள்ளது.

சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் புதிதாக மருத்துவம் சார்ந்த படிப்பினை தொடங்க இந்திய மருத்துவக் குழு அனுமதித்துள்ளது. இது பேச்சு மற்றும் காது குறைபாடினையுடையவர்களைப் பரிசோதனை செய்யும் பட்டப்படிப்பாகும். இந்த படிப்பின் கால அளவு நான்கு வருடமாகும்.


இந்திய மறுவாழ்வுக் குழு இந்தப் படிப்பிற்கான அனுமதியினை இந்திய மருத்துவக் குழுவிற்கு அனுப்பியது. இதனையடுத்து 06.10.2012 சென்னை மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் குழு வந்து பார்வையிட்டு இதற்கான அனுமதியினை தற்போது வழங்கியுள்ளது. இந்தப் படிப்பிற்காக கூடுதலாக உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்க வேண்டும் என மருத்துக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் படிப்பில் வருடத்திற்கு 25 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக