பஸ் ஓட்டுநர் வேலை நிறுத்தம் சட்டவிரோதம்-அமைச்சர் டான்


எஸ்எம்ஆர்டி பஸ் ஓட்டுநர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலைக்கு வராமல் சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டது சட்டவிரோத வேலை நிறுத்தம் என்று அரசாங் கம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தற்காலிக மனித வள அமைச்சர் டான் சுவான் ஜின் நேற்றுக் கூறினார்.
“அவர்களின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. சட்டவிரோத வேலை நிறுத்தம் தொடர்பில் போலிஸ் புலன் விசாரணை நடக்கிறது,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக