அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

இறைப்பற்றுள்ளவர்களை எந்தத் துன்பமும் அணுகாது’: இஃப்தார் விருந்தில் ஜெயலலிதா பேச்சு

சென்னையில் அதிமுக சார்பில் வர்த்தக மைய வளாகத்தில் உள்ள கன்வென்சன் ஹாலில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த இஃப்தார் நிகழ்ச்சியில், அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கலந்துகொண்டார். மேலும் அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப், அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழச்சியில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ”ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் அகமும் புறமும் தூய்மை அடைகிறது. தூய்மை அடைவதன் மூலம் இறைப்பற்றும், அன்பும் மேலோங்குகிறது. மனித நேயம் இருக்கும் இடத்தில் அறம் செழிக்கும். எங்கு மனித நேயம் இருக்கிறதோ அங்கு அன்பு செழிக்கும். இறைப்பற்றுள்ளவர்களை எந்தத் துன்பமும் அணுகாது. இறைவனே நேரடியாக பலன் தரும் இந்த நோன்பு கடமை மிக வலிமையும், புனிதமும் கொண்டது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக