வேதாரண்யத்தில் விழிப்புணர்வு பேரணி

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
இந்த மகளிர் தின விழாவுக்கு ஒன்றியக் குழுத் தலைவர் சுசீலாதேவி சரவணன் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முருகையன், அசோக்குமார், ஊராட்சித் தலைவர் மலர்விழி தமிழழகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, வீராச்சாமி, வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, முக்கிய வீதிகள் வழியாக மகளிருக்கு எதிரான பிரச்னைகள், அவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள், மகளிர் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக