தோப்புத்துறை காமிலா இல்லம் அருகில் விபத்து

12/03/2013 தோப்புத்துறை
தோப்புத்துறை காமிலா இல்லம் அருகில் நேற்று மாலை 8 மணியளவில் 2 இருசக்கர வாகனம் எதிர் எதிரே மோதி 4 பேர் விபத்துக்குள்ளானார்கள் .ஒருவாகனத்தில் வந்த தோப்புதுறையை சேர்ந்த  இரண்டு சகோதரர்களும் மற்றொரு வாகனத்தில் வெளிவூரை சேர்ந்த இரண்டு நண்பர்களும்  மிகுந்த காயம் அடைந்தனர் . பிறகு சம்பவ இடத்திலிருந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு முதல் உதவி அளிக்கப்பட்டது .

தோப்புத்துறை சகோதரர் ஒருவர் பலத்த காயம் காரணமாக 108 ஆம்புலன்சில் திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கும்,  மற்றொருவரை தோப்புத்துறை முஸ்லிம் ஜமாஅத் மன்றம் ஆம்புலன்சில் நாகை அரசு மருத்துவமனைக்கும்    இரவு 9.30 மணியளவில் அனுப்பிவைக்கப்பட்டது. காயம் அடைந்த வெளிவூரை சேர்ந்த நண்பர்களும் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அனுப்பி  வைக்கப்பட்டனர்.

விபத்தில் படு காயம் அடைந்த அச்சகோதரர்கள் குணம் அடைந்து நல் வாழ்வு பெற எல்லாம் வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் பிரத்திப்போமாக....... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக