தோப்புத்துறை நகை கடையில் திருட்டு




தோப்புத்துறை 27/02/2013
தோப்புத்துறை ஆறுமுகச்சந்தியில் இயங்கி வரும் பிரபல KMKI  ஜுவல்லரியில் இன்று நள்ளிரவு பூட்டை உடைத்து   திருட்டு நடந்துள்ளது. காலையில் கடை திறக்கும் பொழுது ஷோ கேசில் வைக்கப்பட்டிருந்த பொருள் களவாகி இருந்தது தெரியவந்ததையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து செய்தியை கேட்டு அறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.

]மேலும்  அக்கடையில்  கண்காணிப்பு கேமரா (CCTV ) வசதி பொருத்தப்பட்டு இருந்தமையால் பதிவாகியுள்ள கோப்புகளை ஆராயும் பொழுது திருடர்களின் கைவருசை நடந்த வீடியோ கண்டுபிடிக்கபட்டது . இதில் சரியாக நள்ளிரவு 1.30 மணியளவில் இரண்டு நபர்  வெள்ளை முழுக்கை சட்டை அணிந்து  முகத்தில் துண்டை கற்றி கொண்டு  பொருட்களை களவாடும் நிகழ்வும் ,  சரியாக 1.44 மணியளவில் திருடன் ஒருவன்  மொபைலில் பேசி கொண்டிருக்கும் போன்ற காட்சியும் பதிவாகியுள்ளது . கேமரா-வில் வரும் திருடர்களின் முகங்கள் வட இந்தியர்கள் போன்று இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக