சிங்கப்பூர், 12 Jan.13. சொத்து விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும்
நோக்கத்துடன் விரிவான தணிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம்
அறிவித்திருக்கிறது
. எக்சகியூடிவ்
கொண்டோமினிய வீடுகளின் அளவில் கட்டுப்பாடு, வங்கிக்
கடன் பெறுவதில் கட்டுப்பாடு, வீடு வாங்குவோருக்கு
கூடுதல் முத்திரை வரி ஆகியவை நேற்று புதிதாக அறிவிக்கப்பட்ட
நடவடிக்கைகளில் அடங்கும்.
மேலும், தொழில்துறை சொத்துச் சந்தையில் ஊக நடவடிக்கையைக்
கட்டுப்படுத்த முதல் முறையாக புதிய முத்திரை வரியையும்
அரசாங்கம் அறிமுகம் செய்கிறது. இந்த மாற்றங்கள்
அனைத்தும் இன்றுமுதல் நடப்புக்கு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக